திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.86 திருச்சேறை - திருவிராகம் பண் - சாதாரி |
முறியுறு நிறமல்கு முகிழ்முலை மலைமகள் வெருவமுன்
வெறியுறு மதகரி யதள்பட வுரிசெய்த விறலினர்
நறியுறும் இதழியின் மலரொடு நதிமதி நகுதலை
செறியுறு சடைமுடி யடிகள்தம் வளநகர் சேறையே.
|
1 |
புனமுடை நறுமலர் பலகொடு தொழுவதொர் புரிவினர்
மனமுடை அடியவர் படுதுயர் களைவதொர் வாய்மையர்
இனமுடை மணியினொ டரைசிலை யொளிபெற மிளிர்வதோர்
சினமுதிர் விடையுடை யடிகள்தம் வளநகர் சேறையே.
|
2 |
புரிதரு சடையினர் புலியதள் அரையினர் பொடிபுல்கும்
எரிதரும் உருவினர் இடபம தேறுவ ரிடுலா
வரிதரு வளையின ரவரவர் மகிழ்தர மனைதொறுந்
திரிதரு சரிதையர் உறைதரு வளநகர் சேறையே.
|
3 |
துடிபடும் இடையுடை மடவர லுடனொரு பாகமா
இடிபடு குரலுடை விடையினர் படமுடை யரவினர்
பொடிபடும் உருவினர் புரியுரி பொலிதரும் அரையினர்
செடிபடு சடைமுடி யடிகள்தம் வளநகர் சேறையே.
|
4 |
அந்தர முழிதரு திரிபுர மொருநொடி யளவினில்
மந்தர வரிசிலை யதனிடை யரவரி வாளியால்
வெந்தழி தரவெய்த விடலையர் விடமணி மிடறினர்
செந்தழல் நிறமுடை யடிகள்தம் வளநகர் சேறையே.
|
5 |
மத்திர முறுதிறன் மறவர்தம் வடிவுகொ டுரவுடைப்
பத்தொரு பெயருடை விசயனை அசைவுசெய் பரிசினால்
அத்திரம் அருளும்நம் அடிகள தணிகிளர் மணியணி
சித்திர வளநகர் செறியொழில் தழுவிய சேறையே.
|
6 |
பாடினர் அருமறை முறைமுறை பொருளென அருநடம்
ஆடினர் உலகிடை அலர்கொடும் அடியவர் துதிசெய
வாடினர் படுதலை யிடுபலி யதுகொடு மகிழ்தருஞ்
சேடர்தம் வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே.
|
7 |
கட்டுர மதுகொடு கயிலைநன் மலைநலி கரமுடை
நிட்டுரன் உடலொடு நெடுமுடி யொருபதும் நெரிசெய்தார்
மட்டுர மலரடி யடியவர் தொழுதெழ அருள்செயுஞ்
சிட்டர்தம் வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே..
|
8 |
பன்றியர் பறவையர் பரிசுடை வடிவொடு படர்தர
அன்றிய அவரவர் அடியொடு முடியவை யறிகிலார்
நின்றிரு புடைபட நெடுவெரி நடுவெயொர் நிகழ்தரச்
சென்றுயர் வெளிபட அருளிய அவர்நகர் சேறையே.
|
9 |
துகடுறு விரிதுகில் உடையவர் அமணெனும் வடிவினர்
விகடம துறுசிறு மொழியவை நலமில வினவிடல்
முகிழ்தரும் இளமதி யரவொடும் அழகுற முதநதி
திகழ்தரு சடைமுடி யடிகள்தம் வளநகர் சேறையே.
|
10 |
கற்றநன் மறைபயில் அடியவர் அடிதொழு கவினுறு
சிற்றிடை யவளொடு மிடமென வுறைவதொர் சேறைமேற்
குற்றமில் புகலியுள் இகலறு ஞானசம் பந்தன
சொற்றக வுறமொழி பவரழி விலர்துயர் தீருமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |